ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.57 லட்சம்: வெளிநாட்டு கரன்சி, தங்கம், வெள்ளி நகைகளும் வந்தன!

பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக 57 லட்சம் ரூபாய் கிடைத்தது. வெளிநாட்டு கரன்சி மற்றும் தங்கம், வெள்ளி நகைகளும் காணிக்கையாக வந்தன.


பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக 57 லட்சம் ரூபாய் கிடைத்தது.வெளிநாட்டு கரன்சி மற்றும் தங்கம், வெள்ளி நகைகளும் காணிக்கையாக வந்தன.

ஆனைமலையில் உள்ள மாசாணிஅம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இங்கு வெள்ளிக்கிழமைகள், அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் உள்ளூர் மட்டுமன்றி, வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். கடந்த மாதம் மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா நடைபெற்ற நிலையில், நேற்று கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.



கோவை உதவி ஆணையர் விஜயலட்சுமி, ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உதவி ஆணையர் கருணாநிதி, ஆய்வாளர் அருள்பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பக்தர்கள் ஈடுபட்டனர். இதில் உண்டியல் காணிக்கையாக ரூ.57 லட்சத்து 49 ஆயிரத்து 852 பணமாக கிடைக்கப்பெற்றது. மேலும் 299 கிராம் தங்க நகைகளும், 901 கிராம் வெள்ளி நகைகளும், வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாக கிடைக்கப்பெற்றதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...