கோவை: குற்றவாளிகளைப் பிடிப்பதில் கண்காணிப்பு கேமரா முக்கிய ஆதாரமாக இருக்கிறது என்று கோவை மாவட்ட எஸ்.பி. அருளரசு கூறினார்.
கோவை: குற்றவாளிகளைப் பிடிப்பதில் கண்காணிப்பு கேமரா முக்கிய ஆதாரமாக இருக்கிறது என்று கோவை மாவட்ட எஸ்.பி. அருளரசு கூறினார்.
பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும் 8 கிலோமீட்டர் தொலைவுக்கு அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

புதிதாக பொருத்தப்பட்டுள்ள இந்த கண்காணிப்பு கேமராக்களை கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருளரசு நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
`கிணத்துக்கடவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புதிதாகப் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் 10 கேமராக்கள் சூரிய ஒளி சக்தி மின்சாரத்தில் இயங்கக்கூடியவை. பொள்ளாச்சி - கோவை சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவுக்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் இப்பகுதியில் குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளியைக் கண்டுபிடிக்கவும், விபத்துக்களை தடுக்கவும் உதவியாக இருக்கும்.
மேலும் பொதுமக்களும் தாங்கள் வசிக்கும் குடியிருப்புகளில் அதிக அளவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். இதை அந்தந்த பகுதி போலீஸ் அதிகாரிகள் எடுத்துச்சொல்ல வேண்டும். கோவை மாவட்ட அளவில் ஐந்து குற்றங்களில் ஒரு குற்றம் கண்காணிப்பு கேமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. கண்காணிப்பு கேமரா முக்கிய ஆதாரமாக காவல்துறைக்கு உதவியாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது பேரூர் டி.எஸ்.பி. சீனிவாசலு உள்பட காவல்துறை ஆய்வாளர்கள், உதவி காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்
பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும் 8 கிலோமீட்டர் தொலைவுக்கு அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
புதிதாக பொருத்தப்பட்டுள்ள இந்த கண்காணிப்பு கேமராக்களை கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருளரசு நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
`கிணத்துக்கடவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புதிதாகப் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் 10 கேமராக்கள் சூரிய ஒளி சக்தி மின்சாரத்தில் இயங்கக்கூடியவை. பொள்ளாச்சி - கோவை சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவுக்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் இப்பகுதியில் குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளியைக் கண்டுபிடிக்கவும், விபத்துக்களை தடுக்கவும் உதவியாக இருக்கும்.
மேலும் பொதுமக்களும் தாங்கள் வசிக்கும் குடியிருப்புகளில் அதிக அளவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். இதை அந்தந்த பகுதி போலீஸ் அதிகாரிகள் எடுத்துச்சொல்ல வேண்டும். கோவை மாவட்ட அளவில் ஐந்து குற்றங்களில் ஒரு குற்றம் கண்காணிப்பு கேமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. கண்காணிப்பு கேமரா முக்கிய ஆதாரமாக காவல்துறைக்கு உதவியாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது பேரூர் டி.எஸ்.பி. சீனிவாசலு உள்பட காவல்துறை ஆய்வாளர்கள், உதவி காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்