பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் முத்தூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் தாலுகா காவல் நிலைய போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதிலிருந்த பாலித்தீன் கவர் பார்சல்களில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அதிலிருந்த 4 கிலோ கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த சம்சுதீன், சித்திக், மனோஜ் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர்.

இவர்கள் மூன்றுபேரும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதுபோல் வந்து பழனியில் கஞ்சா வாங்கிக்கொண்டு கேரள மாநிலத்தில் உள்ள கல்லூரி மற்றும் பல்வேறு இடங்களில் விற்பனை செய்வதற்காக கொண்டு செல்ல முயன்றது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள்மீது கஞ்சா கடத்தல் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் முத்தூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் தாலுகா காவல் நிலைய போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதிலிருந்த பாலித்தீன் கவர் பார்சல்களில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அதிலிருந்த 4 கிலோ கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த சம்சுதீன், சித்திக், மனோஜ் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர்.
இவர்கள் மூன்றுபேரும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதுபோல் வந்து பழனியில் கஞ்சா வாங்கிக்கொண்டு கேரள மாநிலத்தில் உள்ள கல்லூரி மற்றும் பல்வேறு இடங்களில் விற்பனை செய்வதற்காக கொண்டு செல்ல முயன்றது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள்மீது கஞ்சா கடத்தல் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.