வால்பாறை: வால்பாறையில், ஆதிவாசிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
வால்பாறை: வால்பாறையில், ஆதிவாசிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறை வட்டாட்சியர் ராஜா அறிவுறுத்தலின்பேரில் வால்பாறையில் வருவாய்த்துறை மூலம் பொதுமக்களுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை இயக்குவது பற்றிய செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு கட்டமாக ஐயர் பாடி ஜெ.இ.பங்களா அருகிலுள்ள கவர்க்கல் செட்டில்மென்ட்டில் உள்ள ஆதிவாசிகளுக்கு வால்பாறை தாலுகா அலுவலக அலுவலர் பாபுஜி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் மின்னணு வாக்கு இயந்திரம் மூலம் வாக்களிக்கும் முறை மற்றும் வாக்களித்ததை தெரிந்து கொள்வது எப்படி என்பதை தெளிவாக விளக்கிக்கூறினர்.

இந்த செயல் விளக்கக் கூட்டத்தில் ஆதிவாசி மக்கள் ஏராளமானோர் பங்குபெற்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறை வட்டாட்சியர் ராஜா அறிவுறுத்தலின்பேரில் வால்பாறையில் வருவாய்த்துறை மூலம் பொதுமக்களுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை இயக்குவது பற்றிய செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு கட்டமாக ஐயர் பாடி ஜெ.இ.பங்களா அருகிலுள்ள கவர்க்கல் செட்டில்மென்ட்டில் உள்ள ஆதிவாசிகளுக்கு வால்பாறை தாலுகா அலுவலக அலுவலர் பாபுஜி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் மின்னணு வாக்கு இயந்திரம் மூலம் வாக்களிக்கும் முறை மற்றும் வாக்களித்ததை தெரிந்து கொள்வது எப்படி என்பதை தெளிவாக விளக்கிக்கூறினர்.
இந்த செயல் விளக்கக் கூட்டத்தில் ஆதிவாசி மக்கள் ஏராளமானோர் பங்குபெற்றனர்.