பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படவுள்ள தனியார் கல்லூரியில் சார் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படவுள்ள தனியார் கல்லூரியில் சார் ஆட்சியர்ஆய்வு செய்தார்.
சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் 337 வாக்குச் சாவடிகளும், வால்பாறை சட்டமன்ற தொகுதியில் 304 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாலக்காடு சாலையில் உள்ள எம்.ஜி.எம்.கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளது.

இந்த மையத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் வைத்தியநாதன், பொள்ளாச்சி டி.எஸ்.பி. சிவக்குமார் தலைமையிலான தேர்தல் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் மையத்தை சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், அரசியல் கட்சியினர் பார்வையிடும்வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் 337 வாக்குச் சாவடிகளும், வால்பாறை சட்டமன்ற தொகுதியில் 304 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாலக்காடு சாலையில் உள்ள எம்.ஜி.எம்.கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளது.
இந்த மையத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் வைத்தியநாதன், பொள்ளாச்சி டி.எஸ்.பி. சிவக்குமார் தலைமையிலான தேர்தல் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் மையத்தை சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், அரசியல் கட்சியினர் பார்வையிடும்வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.