கோவை: கோவையில் இருந்து ஈரோடு நோக்கிச் சென்ற கார் மரத்தின்மீது மோதியதில் காரில் பயணம் செய்த 5 பேர் படுகாயமடைந்தனர்.
கோவை: கோவையில் இருந்து ஈரோடு நோக்கிச் சென்ற கார் மரத்தின்மீது மோதியதில் காரில் பயணம் செய்த 5 பேர் படுகாயமடைந்தனர்.
கோவை வழியாக ஈரோடு நோக்கி இன்று காலை 8 மணி அளவில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. கொடிசியா அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே இருந்த மரத்தின்மீது மோதியது. மரத்தில் மோதியதில் கார் கதவுகள் அவர்களைஇறுக்கியது. இதையடுத்து அலறல் சத்தம் போட்ட அவர்களை அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
உடனடியாக கதவைத் திறந்து காருக்குள் இருந்த 5 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். 5 பேர் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? எங்கே சென்று கொண்டிருந்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கோவை வழியாக ஈரோடு நோக்கி இன்று காலை 8 மணி அளவில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. கொடிசியா அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே இருந்த மரத்தின்மீது மோதியது. மரத்தில் மோதியதில் கார் கதவுகள் அவர்களைஇறுக்கியது. இதையடுத்து அலறல் சத்தம் போட்ட அவர்களை அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
உடனடியாக கதவைத் திறந்து காருக்குள் இருந்த 5 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். 5 பேர் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? எங்கே சென்று கொண்டிருந்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.