First on SimpliCity: வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ முற்றிலும் அணைப்பு - மாநகராட்சி ஆணையர் தகவல்

First on SimpliCity: வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ முற்றிலும் அணைப்பு - மாநகராட்சி ஆணையர் தகவல்


கோவை: கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. குப்பைகள் எரிந்ததால் புகை மூட்டத்துடன் காணப்பட்டு மூச்சு விட முடியாமல் மக்கள் அவதியடைந்தனர். இதனிடையே வெள்ளலூர் குப்பைகிடங்கில் ஏற்பட்ட தீ முற்றிலும் அனைக்கப்பட்டுவிட்டது, என மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் கூறியுள்ளார்.

கோவை வெள்ளலூர் குப்பைகிடங்கு 650 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளின் குப்பைகளும் இங்குதான் சேமிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகின்றன. தினமும் சுமார் 900 முதல் 1000 டன் குப்பைகள் இங்கு குவிக்கப்படுகின்றன. வெயிலின் தாக்கத்தால் இந்த குப்பை கிடங்கில் குப்பைகளில் இருந்து உருவாகும் மீதேன் வாயு காரணமாக அடிக்கடி தீ விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. 



இதனிடையே, நேற்று மதியம் வெள்ளலூர் குப்பைகிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து காரணமாக புகை மூட்டம் ஏற்பட்டு அருகில் வசிக்கும் போத்தனூர், அன்புநகர், செட்டிபாளையம் பை பாஸ் சாலை பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மூச்சு திணறளில் அவதியடைந்தனர்.வயதானவர்கள், குழந்தைகள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். 4 தீயனைப்பு வாகனங்கள் தீயனைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. 

இந்த நிலையில், வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ ஏற்று மாலை 5 மணி அளவில் முற்றிலும் அணைக்கப்பட்டுவிட்டது, என்று மாநகராட்சி ஆணையர் குமரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார். 

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...