கோவை: வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் அந்தப் பகுதி முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
கோவை: வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் அந்தப் பகுதி முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட குப்பைகளை சேகரித்து அவை அனைத்தையும் வெள்ளலூர் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் சேகரித்து மொத்தமாக தரம்பிரித்து அதற்கு ஏற்றார்போல அப்புறப்படுத்தப்படும். கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு குப்பைக் குவியல் அதிகமாக இருந்ததால் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று மாலை திடீரென அதே வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. தீ கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் புகை மண்டலம் சூழ்ந்து மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டனர்.

இந்த தகவல் கேள்விப்பட்டவுடன் சிங்காநல்லூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட குப்பைகளை சேகரித்து அவை அனைத்தையும் வெள்ளலூர் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் சேகரித்து மொத்தமாக தரம்பிரித்து அதற்கு ஏற்றார்போல அப்புறப்படுத்தப்படும். கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு குப்பைக் குவியல் அதிகமாக இருந்ததால் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று மாலை திடீரென அதே வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. தீ கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் புகை மண்டலம் சூழ்ந்து மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டனர்.
இந்த தகவல் கேள்விப்பட்டவுடன் சிங்காநல்லூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.