கோவை சரவணம்பட்டி சாலையில் 6 பேர் ஒரே பைக்கில் பயணம்; மடக்கி பிடித்த போலீசார்..!

கோவை: இன்று மாலை கோவை சத்தியமங்கலம் சாலையில், கோவை சிவா மருத்துவமனையில் இருந்து சரவணம்பட்டி செல்லும் சாலையில் 6 இளைஞர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: இன்று மாலை கோவை சத்தியமங்கலம் சாலையில், கோவை சிவா மருத்துவமனையில் இருந்து சரவணம்பட்டி செல்லும் சாலையில் 6 இளைஞர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களது, விபரீத பயணத்தை நேரில் பார்த்த சிலர், காரில் சென்ற பொதுமக்கள் அதை வீடியோவாக பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து அந்த வீடியோவை மத்திய போக்குவரத்து போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். அந்த வீடியோவில் மோட்டார் சைக்கிளின் எண் தெளிவாக தெரிந்ததால், உடனடியாக போக்குவரத்து துணை ஆணையர் முத்தரசு உத்தரவின்பேரில் போலீசார் அவர்களை சிசிடிவி கேமரா மூலமாக கண்காணித்து அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர்.



சாலை விதிகளை மதிக்காமல் சென்றது, மோட்டார் சைக்கிளில் அளவுக்கு அதிகமான ஆட்கள் பயணித்தது, மதுபோதையில் இருந்தது, என பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...