கோவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் இன்று கோவையில் இன்று நடைபெற்றது. கட்சியின், கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர், சீதாராம் யெச்சூரி தலைமை தாங்கிய கூட்டத்தில் வரும் தேர்தலில் கட்சின் பங்கு மற்றும் கூட்டணி குறித்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
கோவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் இன்று கோவையில் இன்று நடைபெற்றது. கட்சியின், கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர், சீதாராம் யெச்சூரி தலைமை தாங்கிய கூட்டத்தில் வரும் தேர்தலில் கட்சின் பங்கு மற்றும் கூட்டணி குறித்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது, கட்சியின் பொதுச் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது : திமுகவின் குழுவோடு முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்துள்ளது. தொடர்ந்து, பேச்சுவார்த்தை நடைபெறும். ஒவ்வொரு தேர்தலிலும் குறிப்பிட்ட காலத்தில் இருக்கக்கூடிய தேர்தல் யூத்திகளை பொறுத்து தான் கூட்டணி அமைப்போம்.
இந்த தேர்தலில் தமிழக மக்களை பாதுகாக்க, பண்பாட்டை பாதுகாக்க அதிமுக பாஜக கூட்டணியை தோற்கடிக்க திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி படுத்தோல்வியை அடைந்தது. கோவை மாவட்டத்தில் மக்கள் பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து பேசி வருகிறோம். மக்களுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பின் போது உடன் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Related link
சசிகலா அரசியலில் இருந்து விலகியதிற்கு பின்னால் பா.ஜ.கவின் பங்கு இருக்கிறது - கோவையில் சீதாராம் யெச்சூரி பேட்டி