கோவை: மேட்டுப்பாளையம் யானைகள் புத்துணர்வு முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் யானை ஜெயமால்யதாவை அடித்து கொடுமைப்படுத்திய பாகன்கள் சிறையில் அடைக்கப்பட்டதால் யானையின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த யானையை ஸ்ரீவில்லிபுத்தூர் அனுப்ப மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.
கோவை: மேட்டுப்பாளையம் யானைகள் புத்துணர்வு முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் யானை ஜெயமால்யதாவை அடித்து கொடுமைப்படுத்திய பாகன்கள் சிறையில் அடைக்கப்பட்டதால் யானையின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த யானையை ஸ்ரீவில்லிபுத்தூர் அனுப்ப மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பிப்ரவரி 8-ம் தேதி யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் துவங்கியது. தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இருந்து, 26 யானைகள் பங்கேற்றன. பிப்ரவரி 21-ந்தேதி ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான ஜெயமால்யதா என்ற பெண் யானையை, பாகன் வினில்குமார், உதவியாளர் சிவபிரசாத் ஆகியோர் பிரம்பால் அடித்து துன்புறுத்தினர். இதையடுத்து பாகன் மற்றும் உதவியாளர் மீது வனத்துறையினர் வழக்குப் பதிந்து அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே யானையைப் பராமரிக்க திருச்செந்தூர் கோயில் யானை பாகன் சுப்ரமணி, தற்காலிகமாக நியமிக்கப்பட்டார். நீண்டகாலமாக யானையைப் பராமரித்து வந்த பாகன்கள் இல்லாததால், யானையின் குணாதிசயங்கள் மாற வாய்ப்பு உள்ளது. எனவே, மருத்துவக்குழு மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளின் பரிந்துரையை ஏற்று, ஜெயமால்யதா யானையை முகாமில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு திருப்பி அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை முகாம் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பிப்ரவரி 8-ம் தேதி யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் துவங்கியது. தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இருந்து, 26 யானைகள் பங்கேற்றன. பிப்ரவரி 21-ந்தேதி ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான ஜெயமால்யதா என்ற பெண் யானையை, பாகன் வினில்குமார், உதவியாளர் சிவபிரசாத் ஆகியோர் பிரம்பால் அடித்து துன்புறுத்தினர். இதையடுத்து பாகன் மற்றும் உதவியாளர் மீது வனத்துறையினர் வழக்குப் பதிந்து அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே யானையைப் பராமரிக்க திருச்செந்தூர் கோயில் யானை பாகன் சுப்ரமணி, தற்காலிகமாக நியமிக்கப்பட்டார். நீண்டகாலமாக யானையைப் பராமரித்து வந்த பாகன்கள் இல்லாததால், யானையின் குணாதிசயங்கள் மாற வாய்ப்பு உள்ளது. எனவே, மருத்துவக்குழு மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளின் பரிந்துரையை ஏற்று, ஜெயமால்யதா யானையை முகாமில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு திருப்பி அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை முகாம் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.