கோவை: கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அலுவலகங்களில் தேர்தல் விதிமுறை மீறல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அலுவலகங்களில் தேர்தல் விதிமுறை மீறல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவித்த உடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் பல்வேறு அரசுத் துறை அலுவலகங்களில் ஆளுங்கட்சியினரின் புகைப்படங்கள் கொண்ட ஸ்டிக்கர்கள் அகற்றப்படாமல் உள்ளதாக அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து கோவை கலெக்டர் அலுவலக அரசு அதிகாரிகள் கூறியதாவது:-
தேர்தல் தேதி அறிவித்தவுடன் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன. இருப்பினும் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் பழைய கட்டடம் மற்றும் புதிய கட்டடங்களில் பல்வேறு அரசு துறை அலுவலகங்களில் ஒட்டப்பட்டுள்ள ஆளுங்கட்சியினரின் புகைப்படங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் அகற்றப்படாமல் உள்ளன.
சில அலுவலகங்களில் அலுவலர்கள் தாங்களே தண்ணீரைக் கொண்டு அவற்றை அகற்றி விட்டனர். ஆனால் பெரும்பாலான அரசு துறை அலுவலகங்களில் இந்த ஸ்டிக்கர்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.