கோவை: தேர்தலின்போது தமிழக, கேரள எல்லையில் மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலைத் தவிர்க்க பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
கோவை: தேர்தலின்போது தமிழக, கேரள எல்லையில் மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலைத் தவிர்க்க பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. இதில் தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6 -ஆம் தேதி வாக்குபதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில் தற்போது மூன்று மாநிலங்களிலும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் கோவைக்கு அருகே கேரளா மாநிலம் உள்ளதாலும், இரு மாநிலங்களிலும் ஒரே நாளில் தேர்தல் நடைபெற உள்ளதால் மாநில எல்லைகளில் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்தான உயர் மட்ட அதிகாரிகளிடையேயான ஆலோசனைக் கூட்டம் கேரள மாநிலம் கோழிப்பாறா பகுதியில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, பாலக்காடு ஆட்சியர் மிருன்மாயி ஜோஷி, காவல் கண்காணிப்பாளர் விஷ்வநாத், திருச்சூர் ஆட்சியர் ஷானவாஸ், காவல் கண்காணிப்பாளர் பூங்குழலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் மாநில எல்லைகளிடையே வனப்பகுதிகள் அமைந்துள்ளதால் மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தல்களை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் தேர்தல் விதிமீறல்களைத் தடுக்க இரு எல்லைகளிலும் வாகனச் சோதனைகளை அதிகப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. வாக்குப்பதிவு நாட்களில் எல்லைகளில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் குறித்தும் பேசப்பட்டது. இந்தக் கூட்டத்தில் இரு மாநில வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. இதில் தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6 -ஆம் தேதி வாக்குபதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில் தற்போது மூன்று மாநிலங்களிலும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் கோவைக்கு அருகே கேரளா மாநிலம் உள்ளதாலும், இரு மாநிலங்களிலும் ஒரே நாளில் தேர்தல் நடைபெற உள்ளதால் மாநில எல்லைகளில் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்தான உயர் மட்ட அதிகாரிகளிடையேயான ஆலோசனைக் கூட்டம் கேரள மாநிலம் கோழிப்பாறா பகுதியில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, பாலக்காடு ஆட்சியர் மிருன்மாயி ஜோஷி, காவல் கண்காணிப்பாளர் விஷ்வநாத், திருச்சூர் ஆட்சியர் ஷானவாஸ், காவல் கண்காணிப்பாளர் பூங்குழலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் மாநில எல்லைகளிடையே வனப்பகுதிகள் அமைந்துள்ளதால் மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தல்களை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் தேர்தல் விதிமீறல்களைத் தடுக்க இரு எல்லைகளிலும் வாகனச் சோதனைகளை அதிகப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. வாக்குப்பதிவு நாட்களில் எல்லைகளில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் குறித்தும் பேசப்பட்டது. இந்தக் கூட்டத்தில் இரு மாநில வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.