கோவை: கோவையில் ஒக்கிலிபாளையம் பள்ளிக்கும், பள்ளி மாணவர்களுக்கும் இடையூறாக உள்ள உலவு மரத்தை அகற்றக் கோரி கிராம மக்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவையில் ஒக்கிலிபாளையம் பள்ளிக்கும், பள்ளி மாணவர்களுக்கும் இடையூறாக உள்ள உலவு மரத்தை அகற்றக் கோரி கிராம மக்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி அருகே ஒக்கிலிபாளைம் ஊராட்சியில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளி சுற்றுச்சுவர் கட்டுவதற்கு பணிகள் நடைபெற்று வருகிறது அப்பள்ளியில் உள்ள உலவு மரத்தின் மரக்கிளைகள் தொடர்ந்து பள்ளி குழந்தைகளின் மேல் விழுந்து வருவதாகவும் இதற்கு இடையூறாக உள்ள உலவு மரக்கிளைகளை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வெட்டியதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சார் ஆட்சியரிடம் கடந்த திங்கட்கிழமை மனு அளித்தனர்.
இந்நிலையில், இன்று அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இடையூறாக உள்ள மரத்தை வெட்ட அனுமதி வேண்டும் என கூறி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மரத்தை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மரத்தை வெட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
பொள்ளாச்சி அருகே ஒக்கிலிபாளைம் ஊராட்சியில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளி சுற்றுச்சுவர் கட்டுவதற்கு பணிகள் நடைபெற்று வருகிறது அப்பள்ளியில் உள்ள உலவு மரத்தின் மரக்கிளைகள் தொடர்ந்து பள்ளி குழந்தைகளின் மேல் விழுந்து வருவதாகவும் இதற்கு இடையூறாக உள்ள உலவு மரக்கிளைகளை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வெட்டியதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சார் ஆட்சியரிடம் கடந்த திங்கட்கிழமை மனு அளித்தனர்.
இந்நிலையில், இன்று அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இடையூறாக உள்ள மரத்தை வெட்ட அனுமதி வேண்டும் என கூறி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மரத்தை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மரத்தை வெட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.