பொள்ளாச்சி: பொள்ளாச்சி அரசு மருத்துவமனை முன் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அங்கு அத்துமீறி வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அரசு மருத்துவமனை முன் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அங்கு அத்துமீறி வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகர் பகுதிகளில் பொள்ளாச்சி - கோவை சாலை மற்றும் உடுமலை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையின் முன்புறம் உள்ள சாலை மற்றும் தேர் நிலைய சாலைகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேசிய நெடுஞ்சாலை என்பதால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.

அரசு மருத்துவமனை முன் தார்ச்சாலைகள் அமைக்கும் பணி முடிவடைந்த நிலையில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், தனியார் ஆம்புலன்ஸ்கள் அரசு மருத்துவமனை முன்புறம் உள்ள சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளதால் மருத்துவமனையின் உள்ளே செல்லும் ஆம்புலன்ஸ்கள் சரியான நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் நெரிசல் காரணமாக பாதசாரிகள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவதால், அங்கு நிறுத்தப்படும் வாகனங்களை வேறு இடத்தில் நிறுத்த போக்குவரத்து காவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி நகர் பகுதிகளில் பொள்ளாச்சி - கோவை சாலை மற்றும் உடுமலை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையின் முன்புறம் உள்ள சாலை மற்றும் தேர் நிலைய சாலைகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேசிய நெடுஞ்சாலை என்பதால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
அரசு மருத்துவமனை முன் தார்ச்சாலைகள் அமைக்கும் பணி முடிவடைந்த நிலையில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், தனியார் ஆம்புலன்ஸ்கள் அரசு மருத்துவமனை முன்புறம் உள்ள சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளதால் மருத்துவமனையின் உள்ளே செல்லும் ஆம்புலன்ஸ்கள் சரியான நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் நெரிசல் காரணமாக பாதசாரிகள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவதால், அங்கு நிறுத்தப்படும் வாகனங்களை வேறு இடத்தில் நிறுத்த போக்குவரத்து காவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.