கோவை: வீடுகளில் சென்று ஓட்டு சேகரிக்க 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: வீடுகளில் சென்று ஓட்டு சேகரிக்க 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணிகள், இட ஒதுக்கீடுகள், பிரச்சாரங்கள் என தங்களது தேர்தல் பணியை முடுக்கி விட்டுள்ளனர். இந்த நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்து தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் அதிகாரிகள், அலுவலர்கள், தேர்தல் நடத்தை விதிமுறைகளை வெளியிட்டு வருகின்றனர்.
இதற்கிடையே தெருக்களுக்குச் சென்று வீடுகளில் ஓட்டு கேட்கச் செல்லும் அரசியல் கட்சியினர் 55 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்றும் அதற்கு மேல் சென்றால் சட்ட நடவடிக்கை பாயும் என்றும் தேர்தல் அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் அரசியல் கட்சியினர் வாகனங்களில் மதுபானங்களை எடுத்துச் சென்றால் உடனடியாக அவற்றை பறிமுதல் செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்தேர்தல் நடத்தும் அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா பாதிப்பால், வீடுகளுக்குச் சென்று ஓட்டு சேகரிக்க அதிகபட்சமாக, ஐந்து பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இழிவான சொற்களை பயன்படுத்தி, துண்டுப்பிரசுரம் அச்சிடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் இந்த நடைமுறைகளைப் பின்பற்றுமாறு, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அந்தந்த தொகுதிகளில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணிகள், இட ஒதுக்கீடுகள், பிரச்சாரங்கள் என தங்களது தேர்தல் பணியை முடுக்கி விட்டுள்ளனர். இந்த நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்து தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் அதிகாரிகள், அலுவலர்கள், தேர்தல் நடத்தை விதிமுறைகளை வெளியிட்டு வருகின்றனர்.
இதற்கிடையே தெருக்களுக்குச் சென்று வீடுகளில் ஓட்டு கேட்கச் செல்லும் அரசியல் கட்சியினர் 55 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்றும் அதற்கு மேல் சென்றால் சட்ட நடவடிக்கை பாயும் என்றும் தேர்தல் அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் அரசியல் கட்சியினர் வாகனங்களில் மதுபானங்களை எடுத்துச் சென்றால் உடனடியாக அவற்றை பறிமுதல் செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்தேர்தல் நடத்தும் அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா பாதிப்பால், வீடுகளுக்குச் சென்று ஓட்டு சேகரிக்க அதிகபட்சமாக, ஐந்து பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இழிவான சொற்களை பயன்படுத்தி, துண்டுப்பிரசுரம் அச்சிடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் இந்த நடைமுறைகளைப் பின்பற்றுமாறு, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அந்தந்த தொகுதிகளில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.