டி.ஜி.பி. ராஜேஷ்தாசை கைது செய்..! கோவை. எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்ட மாதர் சங்கத்தினர் கைது.
கோவை: பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ்தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரை பணிநீக்கம் செய்து, கைது செய்ய வேண்டும் என கோவையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணை செயலாளர் சுதாசுந்தர்ராமன், மாநில தலைவர் வாலன்டினா, மாநில பொது செயலாளர் சுகந்தி,முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி மற்றும் பிரமிலா, என்.அமிர்தம், ராதிகா உள்ளிட்ட மாதர் சங்க தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக, கோவை மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு ஒன்று திரண்ட மாதர் சங்கத்தினரை காவல் துறையினர் தடுக்க முயன்றனர். ஆனால், போலீஸ் தடையை மீறி ஊர்வலமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த மாதர் சங்கத்தினர், எஸ் பி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அலுவலகத்திற்குள் செல்ல முயன்றவர்களை காவல் துறையினர் தடுத்ததால், அங்கு லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனையடுத்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு திரண்ட மாதர் சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, டிஜிபி ராஜேஸ் தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும்..! கைது செய்யப்பட வேண்டும்..! ராஜேஸ்தாசுக்குஉதவியாக இருந்து பெண் எஸ்.பியை மிரட்டிய செங்கல்பட்டு எஸ்.பி.கண்ணன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.
இதனையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்புமறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாதர் சங்கத்தினரை காவல் துறையினர் கைது செய்தனர். மாதர் சங்கத்தின் முற்றுகை போராட்டம், காரணமாக எஸ்பி அலுவலகம் முன்பு பரபரப்பு நிலவியது.

இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணை செயலாளர் சுதாசுந்தர்ராமன், மாநில தலைவர் வாலன்டினா, மாநில பொது செயலாளர் சுகந்தி,முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி மற்றும் பிரமிலா, என்.அமிர்தம், ராதிகா உள்ளிட்ட மாதர் சங்க தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக, கோவை மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு ஒன்று திரண்ட மாதர் சங்கத்தினரை காவல் துறையினர் தடுக்க முயன்றனர். ஆனால், போலீஸ் தடையை மீறி ஊர்வலமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த மாதர் சங்கத்தினர், எஸ் பி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அலுவலகத்திற்குள் செல்ல முயன்றவர்களை காவல் துறையினர் தடுத்ததால், அங்கு லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு திரண்ட மாதர் சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, டிஜிபி ராஜேஸ் தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும்..! கைது செய்யப்பட வேண்டும்..! ராஜேஸ்தாசுக்குஉதவியாக இருந்து பெண் எஸ்.பியை மிரட்டிய செங்கல்பட்டு எஸ்.பி.கண்ணன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.
இதனையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்புமறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாதர் சங்கத்தினரை காவல் துறையினர் கைது செய்தனர். மாதர் சங்கத்தின் முற்றுகை போராட்டம், காரணமாக எஸ்பி அலுவலகம் முன்பு பரபரப்பு நிலவியது.