பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், கடன் பிரச்சினை காரணமாக வாலிபர் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றார்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், கடன் பிரச்சினை காரணமாக வாலிபர் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றார்.
பொள்ளாச்சி - கோவை ரோடு தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார்.தண்ணீர் கேன் விற்பனை செய்து வருகிறார். இவர் வீட்டுச் செலவுக்காக அவரது உறவினர் ஜெயபிரகாஷ் என்பவரிடம்,ரூபாய் 20 ஆயிரம் வட்டிக்கு வாங்கியதாகக் கூறப்படுகிறது. அதில் தற்போது வட்டியுடன் சேர்த்து 11 ஆயிரம் ரூபாய் கட்டியதாகவும், மீதி பணத்தை ஒரு மாதம் கழித்து தந்துவிடுவதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி மீதம் உள்ள பணத்தை உடனே வழங்கவேண்டும் என்று ஜெயபிரகாஷ் வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் விஜயகுமார் தனது வாகனத்தில் இருந்த பெட்ரோலை எடுத்து அவர் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். தற்போது அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அவர் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜயகுமார் தரப்பிலிருந்து இதுவரை காவல்துறைக்கு புகார் அளிக்கப்படாத நிலையில், சி.சி.டி.வி. கேமரா காட்சிகளைக் கொண்டு கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி - கோவை ரோடு தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார்.தண்ணீர் கேன் விற்பனை செய்து வருகிறார். இவர் வீட்டுச் செலவுக்காக அவரது உறவினர் ஜெயபிரகாஷ் என்பவரிடம்,ரூபாய் 20 ஆயிரம் வட்டிக்கு வாங்கியதாகக் கூறப்படுகிறது. அதில் தற்போது வட்டியுடன் சேர்த்து 11 ஆயிரம் ரூபாய் கட்டியதாகவும், மீதி பணத்தை ஒரு மாதம் கழித்து தந்துவிடுவதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி மீதம் உள்ள பணத்தை உடனே வழங்கவேண்டும் என்று ஜெயபிரகாஷ் வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் விஜயகுமார் தனது வாகனத்தில் இருந்த பெட்ரோலை எடுத்து அவர் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். தற்போது அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அவர் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜயகுமார் தரப்பிலிருந்து இதுவரை காவல்துறைக்கு புகார் அளிக்கப்படாத நிலையில், சி.சி.டி.வி. கேமரா காட்சிகளைக் கொண்டு கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.