கோவை: ஐ.சி.ஏ.ஐ. தென்மண்டல தலைவராக கோவை ஆடிட்டர் கே.ஜலபதி பதவியேற்றுக்கொண்டார்,
கோவை: ஐ.சி.ஏ.ஐ. தென்மண்டல தலைவராக கோவை ஆடிட்டர் கே.ஜலபதி பதவியேற்றுக்கொண்டார்,
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரி மற்றும் லச்சத் தீவைச் சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடிட்டர்களையும், மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களையும் கொண்டுள்ளது 'ஐ.சி.ஏ.ஐ.’ தென்பிராந்தியம்.
கடந்த ஆண்டுகளில் தென்மண்டலத்துக்கான மாணவர் அமைப்பின் தலைவர், பொருளாளர், செயலாளர், துணைத் தலைவர் என அனைத்து பொறுப்புகளையும் வகித்து சிறப்பாக செயல்பட்டு குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கும், மாற்றத்துக்கும் கோவையைச் சேர்ந்த ஆடிட்டர் கே.ஜலபதி வழிவகுத்தார்.
இவர், மாணவர்களுக்கான தொழில் ஆலோசனைக் குழுவின் தலைவராக இருந்தபோது தமிழக அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி சுமார் ஒரு லட்சத்துக்கும் மேலான மாணவர்களுக்கும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கும் பயன்பெற உதவினார். கடந்த 60 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் 'ஐ.சி.ஏ.ஐ.’ கோவை கிளையிலிருந்து தென்மண்டல தலைவராக தேர்வாகும் ஐந்தாவது ஆடிட்டர் கே.ஜலபதி என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரி மற்றும் லச்சத் தீவைச் சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடிட்டர்களையும், மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களையும் கொண்டுள்ளது 'ஐ.சி.ஏ.ஐ.’ தென்பிராந்தியம்.
கடந்த ஆண்டுகளில் தென்மண்டலத்துக்கான மாணவர் அமைப்பின் தலைவர், பொருளாளர், செயலாளர், துணைத் தலைவர் என அனைத்து பொறுப்புகளையும் வகித்து சிறப்பாக செயல்பட்டு குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கும், மாற்றத்துக்கும் கோவையைச் சேர்ந்த ஆடிட்டர் கே.ஜலபதி வழிவகுத்தார்.
இவர், மாணவர்களுக்கான தொழில் ஆலோசனைக் குழுவின் தலைவராக இருந்தபோது தமிழக அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி சுமார் ஒரு லட்சத்துக்கும் மேலான மாணவர்களுக்கும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கும் பயன்பெற உதவினார். கடந்த 60 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் 'ஐ.சி.ஏ.ஐ.’ கோவை கிளையிலிருந்து தென்மண்டல தலைவராக தேர்வாகும் ஐந்தாவது ஆடிட்டர் கே.ஜலபதி என்பது குறிப்பிடத்தக்கது.