கோவை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதால். சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதால். சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழகம் முழுவதும் அமுல்படுத்தப்பட்டது. தொடர்ந்து கோவையில் சுவர் விளம்பரங்கள் அழிப்பு, தலைவர்கள் சிலை மூடல், சுவரொட்டிகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த தொடர்ந்து மாநகரின் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டிருந்த வால் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன.
மேலும் அவிநாசி ரோடு, ஜெயில் ரோடு, ஓசூர் ரோடு, திருச்சி ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுவர்களில் எழுதப்பட்டிருந்த கட்சி சார்ந்த விளம்பரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. மேலும் விடுபட்ட இடங்களில் உள்ள சுவர் விளம்பரங்களை அளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுதவிர மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தலைவர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை துணியைக் கொண்டு மூடி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழகம் முழுவதும் அமுல்படுத்தப்பட்டது. தொடர்ந்து கோவையில் சுவர் விளம்பரங்கள் அழிப்பு, தலைவர்கள் சிலை மூடல், சுவரொட்டிகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த தொடர்ந்து மாநகரின் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டிருந்த வால் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன.
மேலும் அவிநாசி ரோடு, ஜெயில் ரோடு, ஓசூர் ரோடு, திருச்சி ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுவர்களில் எழுதப்பட்டிருந்த கட்சி சார்ந்த விளம்பரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. மேலும் விடுபட்ட இடங்களில் உள்ள சுவர் விளம்பரங்களை அளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுதவிர மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தலைவர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை துணியைக் கொண்டு மூடி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.