கோவையில் அமைச்சர் வேலுமணியை விமர்சித்து துண்டுப்பிரசுரம் விநியோகித்ததாக தி.மு.க. நிர்வாகிகள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கோவையில் அமைச்சர் வேலுமணியை விமர்சித்து துண்டுப்பிரசுரம் விநியோகித்ததாக தி.மு.க. நிர்வாகிகள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கோவை குனியமுத்தூர் பி.கே.புதூர், பெரியார் நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் தி.மு.க. சார்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அதில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை விமர்சனம் செய்யும்வகையில் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றிருந்தன.
இது தொடர்பாக அப்பகுதி அ.தி.மு.க.வினர் குனியமுத்தூர் போலீசில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து குனியமுத்தூர் போலீசார் தி.மு.க. பொறுப்பாளர் லோகநாதன், பகுதி இளைஞரணி அமைப்பாளர் கபாலி, 88-வது வார்டு பொறுப்பாளர் பாலு, 93- வது வார்டு பொதுக்குழு உறுப்பினர்கள் தேவேந்திரன், கனகராஜ் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தேர்தல் நடத்தை விதிமுறை மீறி செயல்பட்டதாக அவர்கள்மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை குனியமுத்தூர் பி.கே.புதூர், பெரியார் நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் தி.மு.க. சார்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அதில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை விமர்சனம் செய்யும்வகையில் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றிருந்தன.
இது தொடர்பாக அப்பகுதி அ.தி.மு.க.வினர் குனியமுத்தூர் போலீசில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து குனியமுத்தூர் போலீசார் தி.மு.க. பொறுப்பாளர் லோகநாதன், பகுதி இளைஞரணி அமைப்பாளர் கபாலி, 88-வது வார்டு பொறுப்பாளர் பாலு, 93- வது வார்டு பொதுக்குழு உறுப்பினர்கள் தேவேந்திரன், கனகராஜ் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தேர்தல் நடத்தை விதிமுறை மீறி செயல்பட்டதாக அவர்கள்மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.