கோவை: சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் ஒரு கிலோ செல்போன் வடிவிலான தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை: சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் ஒரு கிலோ செல்போன் வடிவிலான தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமான பயணி ஒருவர், 999 கிலோ கிராம் மதிப்பிலான செல்போன் வடிவத்தில் தங்க கட்டிகளை உருவாக்கி கைப்பையில் மறைத்துக் கொண்டு வந்த போது, அவரை சுங்க இலாகா அதிகாரிகள் மடக்கிப் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
இன்று காலை 3.30 மணி அளவில் கோவை விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் வந்து இறங்கியது. அப்போது, அங்கு இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்தனர். அதில், சிவகங்கையை சேர்ந்த பாலு என்பவருடைய கைப்பையை சோதனை செய்தபோது செல்போன் வடிவில் தங்க கட்டிகளை, செல்போன் கவரை போட்டு மறைத்து, கைப்பையில் எடுத்து வந்தது தெரியவந்தது.
அந்த கட்டிகள எடை போட்டுப் பார்த்தபோது 999 கிலோகிராம் எனவும் அதன் மொத்த மதிப்பு 47.65 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, சிவகங்கையை சேர்ந்த பாலுவிடம் அதிகாரிகள் விசாரணை செய்து, பின்னர் அவரை கைது செய்து, பிறகு அவரை ஜாமீனில் விடுதலை செய்தனர். இதற்கான முழு ஆவணங்கள் சமர்ப்பிக்கும் பட்சத்தில் அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகள் ஒப்படைக்கப்படும், என கூறப்படுகிறது.
இன்று அதிகாலை, ஒரு கிலோ செல்போன் வடிவிலான தங்கக்கட்டிகள் கடத்தப்பட்ட சம்பவத்தால், கோவை விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமான பயணி ஒருவர், 999 கிலோ கிராம் மதிப்பிலான செல்போன் வடிவத்தில் தங்க கட்டிகளை உருவாக்கி கைப்பையில் மறைத்துக் கொண்டு வந்த போது, அவரை சுங்க இலாகா அதிகாரிகள் மடக்கிப் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
இன்று காலை 3.30 மணி அளவில் கோவை விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் வந்து இறங்கியது. அப்போது, அங்கு இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்தனர். அதில், சிவகங்கையை சேர்ந்த பாலு என்பவருடைய கைப்பையை சோதனை செய்தபோது செல்போன் வடிவில் தங்க கட்டிகளை, செல்போன் கவரை போட்டு மறைத்து, கைப்பையில் எடுத்து வந்தது தெரியவந்தது.
அந்த கட்டிகள எடை போட்டுப் பார்த்தபோது 999 கிலோகிராம் எனவும் அதன் மொத்த மதிப்பு 47.65 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, சிவகங்கையை சேர்ந்த பாலுவிடம் அதிகாரிகள் விசாரணை செய்து, பின்னர் அவரை கைது செய்து, பிறகு அவரை ஜாமீனில் விடுதலை செய்தனர். இதற்கான முழு ஆவணங்கள் சமர்ப்பிக்கும் பட்சத்தில் அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகள் ஒப்படைக்கப்படும், என கூறப்படுகிறது.
இன்று அதிகாலை, ஒரு கிலோ செல்போன் வடிவிலான தங்கக்கட்டிகள் கடத்தப்பட்ட சம்பவத்தால், கோவை விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.