கோவை: வாளையாரில், ஜெலட்டின் குச்சிகள் பிடிபட்டதன் எதிரொலியாக காய்கறி லாரிகளில் போலீசார் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.
கோவை: வாளையாரில், ஜெலட்டின் குச்சிகள் பிடிபட்டதன் எதிரொலியாக காய்கறி லாரிகளில் போலீசார் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தப்படுவதாக, கேரள மாநில போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாலக்காடு போலீசார் வாளையார் பகுதியில், நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சேலத்தில் இருந்து காய்கறி லோடு ஏற்றிச் சென்ற லாரியை சோதனை செய்தபோது அதில், ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, லாரி பாலக்காடு போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டது.
லாரியில் இருந்த பெட்டிகளில் 50 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள், 4,500 எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் இருப்பது கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு ஒன்றரை கோடி ரூபாய் என கேரள போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து சேலம் ஆத்துாரைச் சேர்ந்த லாரி டிரைவர் இளவரசன், கிளீனர் கார்த்திக் ஆகிய இருவரையும் கேரள போலீசார் கைது செய்தனர். தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், வெடிபொருள் கடத்தல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, தமிழக எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். கோவை புறநகர் எஸ்.பி. அருளரசு கூறுகையில், `ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் பிடிபட்டதன் எதிரொலியாக நேற்று முன்தினம் இரவு கேரளா சென்ற அனைத்து காய்கறி லாரிகளிலும், தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. காய்கறி லாரிகளில் உள்ள சரக்குகளை இறக்கி, ஏற்றுவதற்கு அரைமணி நேரம் பிடிக்கிறது. இருப்பினும், சோதனை மேற்கொள்ளப்படுகிறது. தினமும் கேரளாவுக்கு 300 லாரிகள் வரை செல்கின்றன. கேரளா செல்லும் லாரிகளை தீவிர சோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது,' என்றார்.
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தப்படுவதாக, கேரள மாநில போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாலக்காடு போலீசார் வாளையார் பகுதியில், நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சேலத்தில் இருந்து காய்கறி லோடு ஏற்றிச் சென்ற லாரியை சோதனை செய்தபோது அதில், ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, லாரி பாலக்காடு போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டது.
லாரியில் இருந்த பெட்டிகளில் 50 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள், 4,500 எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் இருப்பது கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு ஒன்றரை கோடி ரூபாய் என கேரள போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து சேலம் ஆத்துாரைச் சேர்ந்த லாரி டிரைவர் இளவரசன், கிளீனர் கார்த்திக் ஆகிய இருவரையும் கேரள போலீசார் கைது செய்தனர். தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், வெடிபொருள் கடத்தல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, தமிழக எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். கோவை புறநகர் எஸ்.பி. அருளரசு கூறுகையில், `ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் பிடிபட்டதன் எதிரொலியாக நேற்று முன்தினம் இரவு கேரளா சென்ற அனைத்து காய்கறி லாரிகளிலும், தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. காய்கறி லாரிகளில் உள்ள சரக்குகளை இறக்கி, ஏற்றுவதற்கு அரைமணி நேரம் பிடிக்கிறது. இருப்பினும், சோதனை மேற்கொள்ளப்படுகிறது. தினமும் கேரளாவுக்கு 300 லாரிகள் வரை செல்கின்றன. கேரளா செல்லும் லாரிகளை தீவிர சோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது,' என்றார்.