திருப்பூர்: தேர்தல் நடத்தைவிதி அமலில் இருப்பதால் பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் பணம் எடுத்துச் செல்ல திருப்பூர் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
திருப்பூர்: தேர்தல் நடத்தைவிதி அமலில் இருப்பதால் பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் பணம் எடுத்துச் செல்ல திருப்பூர் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்தச் சூழலில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலரான விஜயகார்த்திகேயன் தலைமையில் சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கண்காணிப்புக் குழுவினர், பறக்கும் படையினர் ஆகியோர் கலந்து கொண்டனர். அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் எடுத்துரைத்தார்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள சூழலில் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் திருப்பூர் மாவட்டத்தில் முறையாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தங்கள் செலவுகளுக்காக கொண்டு செல்லும் பணங்களுக்கு உரிய ஆவணங்களுடன் செல்ல வேண்டும். அதேநேரத்தில் அவர்களிடம் விசாரணை செய்யும்போது அதிகாரிகள் கனிவாக நடந்துகொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பறிமுதல் செய்யப்படும் பணங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுவிடம் உரிய ஆவணங்களைக் காண்பித்து உடனடியாக பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்தச் சூழலில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலரான விஜயகார்த்திகேயன் தலைமையில் சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கண்காணிப்புக் குழுவினர், பறக்கும் படையினர் ஆகியோர் கலந்து கொண்டனர். அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் எடுத்துரைத்தார்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள சூழலில் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் திருப்பூர் மாவட்டத்தில் முறையாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தங்கள் செலவுகளுக்காக கொண்டு செல்லும் பணங்களுக்கு உரிய ஆவணங்களுடன் செல்ல வேண்டும். அதேநேரத்தில் அவர்களிடம் விசாரணை செய்யும்போது அதிகாரிகள் கனிவாக நடந்துகொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பறிமுதல் செய்யப்படும் பணங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுவிடம் உரிய ஆவணங்களைக் காண்பித்து உடனடியாக பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.