யாருக்கு ஆதரவு அளிப்பது..? கோவையில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கூட்டம்: பா.ஜ.கவுக்கு நூறு சதவீத எதிர்ப்பு, என தீர்மானம்..!

யாருக்கு ஆதரவு அளிப்பது..? கோவையில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கூட்டம்: பா.ஜ.கவுக்கு நூறு சதவீத எதிர்ப்பு - ஆளுர்‌ ஷா நவாஸ்.



கோவை: வரும் சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது..? என்பது குறித்த கூட்டம், ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் சார்பில், கோவையில் இன்று நடைபெற்றது.

கோவையில் இன்று நடைபெற்ற
ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் அமைப்பின் இரண்டாவது பொதுக்குழு கூட்டம், அவ்வமைப்பின் தலைவர்
ஃபக்கீர் முஹமது அலதாஃபி தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், மக்கள்‌ நலனில் சிறிதும்‌ அக்கரையில்லாமல், கார்ப்பரேட் நிறுவனங்களின் நலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் மத்திய அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது என்றும், பெட்ரோல், டீசல் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை‌ ஏற்றத்தை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அது‌ குறித்து கேள்வி எழுப்பினால் ஆணவத்துடன் பதிலளிக்கும்‌ மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் போக்கு கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தார்.



"பசு மாடு வைத்து அரசியல் செய்து, சிறுபான்மையினர் மக்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் மதவாத பாரதிய ஜனதா கட்சிக்கு ஒருபோதும் ஆதரவு கிடையாது என்றும், பாசிஸ சக்திகளை நூறு சதவீதம்‌ எதிர்ப்பதாகவும் வரும் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு இல்லை", என்று குற்றம் சாட்டினார்.

மின்னனு ஓட்டு முறையை மாற்றி,
வாக்கு சீட்டு முறையையே கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து பேசிய அவர், "வளர்ந்த நாடுகளிலேயே மின்னனு ஓட்டு முறையை பயன்படுத்துவதில்லை, நமது நாட்டில் மின்னனு ஓட்டு எந்திரங்களை பயன்படுத்துவது அதன் மீதான‌ நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும், அதனால் வாக்கு சீட்டு முறையையே கடைபிடிக்குமாறு தாங்கள் கேட்டுக் கொள்வதாக", அமைப்பின் சார்பில் கோரிக்கையை முன்வைத்தனர்.





வரும் சட்டமன்றத் தேர்தலில், எந்த தொகுதியில் எந்த கட்சிக்கு வாக்காளிப்பது என்பது பற்றி, அரசியல் கட்சிகள் தங்களுக்கு வழங்கப்படும் முன்னுரிமை பொறுத்து ஓரிரு தினங்களில் தெரிவிப்பதாக, தெரிவித்த அவர்,
இதுவரை, எந்த கட்சிக்கு ஆதரவு என்பது  இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், பாஜக கட்சிக்கு எதிர்ப்பு என்பதில் மட்டும் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும், தாங்கள் நேரடியாக அரசியலில் இல்லாத காரணத்தினால், சிறுபான்மையினரின் உரிமையை காக்கும் கட்சிக்கு தங்கள் ஆதரவு இருக்கும்‌, என்று  திட்டவட்டமாக தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...