கோவை: வால்பாறையில் வாக்காளருக்கு வழங்க பரிசுப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கோவை: வால்பாறையில் வாக்காளருக்கு வழங்க பரிசுப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
வால்பாறையை அடுத்த ரொட்டிக்கடை பாறைமேடு பகுதியில் அதிமுக பிரமுகர் ரமேஷ் என்பவர் வீட்டில் தேர்தல் விதிமுறைகளை மீறி சுமார் ரூபாய் 2 கோடி மதிப்பிலான 15,000 குடும்பங்களுக்கு கொடுக்க சேலை, வேட்டி, சில்வர் தட்டுகள், பைகள் மேலும் பல பொருட்கள் அதிமுகவினர் பதுக்கி வைத்து இருப்பதை திமுகவினர் கண்டுபிடித்து வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அதனை தொடர்ந்து, வால்பாறை வட்டாட்சியர் ராஜா தலைமையில் வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, உதவி ஆய்வாளர் சதீஷ் முஜிப் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு அந்த வீட்டிற்கு சீல் வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.