ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பணிமனை தொழிலாளர்கள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து இன்று முற்றுகை போராட்டம்..!
கோவை: தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று முதலாவது நாளாக கோவைபணிமனையில் ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, நிர்வாகம் இரவோடு இரவாக இடமாறுதல் உத்தரவு வழங்கி அனுப்பியது. ஆதலால், இன்று இரண்டாவது நாளாக கண்டனம் தெரிவித்து பணிமனை வாசல் முன்பாக தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆதலால், அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
26-02-2021,அன்று கோவை மண்டலத்தில் சுங்கம்-2கிளை முன்பாக கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்பொழுது, ஏ.டி.பி சங்கத்திற்கும், கூட்டமைப்பிற்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையில் ஏ.டி.பி யின் அழுத்தம் காரணமாக MDயும்,GMயும் கீழ்க்கண்ட நபர்களுக்கு (தண்டனை அடிப்படையில்) கட்டாய இடமாறுதல் கொடுத்துள்ளார்கள்,
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1.S.மோகன்ராஜ்-ஓட்டுநர்..எண்:-29298.(சுங்கம்2லிருந்து வால்பாறை கிளைக்கு)
2.N.திருமூர்த்தி:-நடத்துநர்,.எண்:-20347.(சுங்கம்2லிருந்து மேட்டுப்பாளையம்1)
3.R.காமராஜ்:-ப.எண்:-15988,நடத்துனர் பணி,(பாதுகாவலராக மாற்றுப்பணியில் உள்ளார்)
சுங்கம் 2லிருந்து கருமத்தம்பட்டி கிளை.
4.P.செல்வராஜ்:-தணிக்கையாளர்,.பஎண்:-16383,(உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து) திருப்பூர் கிளைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மாற்றப்பட்ட தொழிலாளர்களின்விவரம் தொடர்ந்து பணிமனை வாசலில் ஒட்டப்பட்டு உள்ளதால், பரபரப்பும் பதட்டமும் நிலவி வருகிறது. உடனடியாக, பணி மாற்றம் செய்யப்பட்ட அவர்கள் மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்த வேண்டும், என கோரிக்கை விடுத்து கோஷங்கள், எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று முதலாவது நாளாக கோவைபணிமனையில் ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, நிர்வாகம் இரவோடு இரவாக இடமாறுதல் உத்தரவு வழங்கி அனுப்பியது. ஆதலால், இன்று இரண்டாவது நாளாக கண்டனம் தெரிவித்து பணிமனை வாசல் முன்பாக தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆதலால், அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
26-02-2021,அன்று கோவை மண்டலத்தில் சுங்கம்-2கிளை முன்பாக கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்பொழுது, ஏ.டி.பி சங்கத்திற்கும், கூட்டமைப்பிற்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையில் ஏ.டி.பி யின் அழுத்தம் காரணமாக MDயும்,GMயும் கீழ்க்கண்ட நபர்களுக்கு (தண்டனை அடிப்படையில்) கட்டாய இடமாறுதல் கொடுத்துள்ளார்கள்,
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1.S.மோகன்ராஜ்-ஓட்டுநர்..எண்:-29298.(சுங்கம்2லிருந்து வால்பாறை கிளைக்கு)
2.N.திருமூர்த்தி:-நடத்துநர்,.எண்:-20347.(சுங்கம்2லிருந்து மேட்டுப்பாளையம்1)
3.R.காமராஜ்:-ப.எண்:-15988,நடத்துனர் பணி,(பாதுகாவலராக மாற்றுப்பணியில் உள்ளார்)
சுங்கம் 2லிருந்து கருமத்தம்பட்டி கிளை.
4.P.செல்வராஜ்:-தணிக்கையாளர்,.பஎண்:-16383,(உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து) திருப்பூர் கிளைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மாற்றப்பட்ட தொழிலாளர்களின்விவரம் தொடர்ந்து பணிமனை வாசலில் ஒட்டப்பட்டு உள்ளதால், பரபரப்பும் பதட்டமும் நிலவி வருகிறது. உடனடியாக, பணி மாற்றம் செய்யப்பட்ட அவர்கள் மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்த வேண்டும், என கோரிக்கை விடுத்து கோஷங்கள், எழுப்பி வருகின்றனர்.