ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன்!

பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.



பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்திபெற்ற மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் பின்னர் கோயிலில் நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தது. முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.



கோவை, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விரதம் இருந்து வந்த பக்தர்கள் 30 அடி நீளமுள்ள தீ குண்டத்தில் பக்தி பரவசத்துடன் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக கோயில் அருளாளி பூ பந்து வீசி குண்டம் இறங்கியதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் இறங்கினர்.



விரதம் இருந்த பெண் பக்தர்கள் பூ முடி கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விவசாயம் செழிக்கவும், கொரானா நோய்த் தொற்றில் இருந்து நாடு மீளவும், மக்கள் நலமாக வாழ வேண்டியும் குண்டம் இறங்கியதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...