வால்பாறை: வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் தாவரவியல் பூங்கா திறக்கப்பட்டது.
வால்பாறை: வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் தாவரவியல் பூங்கா திறக்கப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறை ஒரு மலைப்பிரதேசம் சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும், வால்பாறையில் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் வால்பாறையில் ஊட்டி போன்று ஒரு தாவரவியல் பூங்கா அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு முயற்சியால் வால்பாறை பி.ஏ.பி. அலுவலகம் அருகே பொள்ளாச்சி சாலையில் தாவரவியல் பூங்கா அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க உள்ளாட்சித்துறை மற்றும் சிறப்பு அமலாக்கத் திட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவுக்கிணங்க நகராட்சி ஆணையாளர் டாக்டர் பவுன்ராஜ் ரிப்பனை வெட்டி தாவரவியல் பூங்காவை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வால்பாறை நகராட்சி ஆணையாளர் டாக்டர் பவுன்ராஜ், மேலாளர் நஞ்சுண்டன், வால்பாறை கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குனர் வால்பாறை வீ.அமீது, கூட்டுறவு வங்கி துணை இயக்குனர் மயில் கணேசன் மற்றும் ஏராளமான பொதுமக்கள், அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறை ஒரு மலைப்பிரதேசம் சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும், வால்பாறையில் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் வால்பாறையில் ஊட்டி போன்று ஒரு தாவரவியல் பூங்கா அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு முயற்சியால் வால்பாறை பி.ஏ.பி. அலுவலகம் அருகே பொள்ளாச்சி சாலையில் தாவரவியல் பூங்கா அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க உள்ளாட்சித்துறை மற்றும் சிறப்பு அமலாக்கத் திட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவுக்கிணங்க நகராட்சி ஆணையாளர் டாக்டர் பவுன்ராஜ் ரிப்பனை வெட்டி தாவரவியல் பூங்காவை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வால்பாறை நகராட்சி ஆணையாளர் டாக்டர் பவுன்ராஜ், மேலாளர் நஞ்சுண்டன், வால்பாறை கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குனர் வால்பாறை வீ.அமீது, கூட்டுறவு வங்கி துணை இயக்குனர் மயில் கணேசன் மற்றும் ஏராளமான பொதுமக்கள், அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.