கோவையில் 'ஸ்டாலின் தான் வாராரு, விடியல் தரப் போறாரு' ரிங் டோன் வெளியீடு..!

தேர்தல் அறிவிப்பை முன்னிட்டு நாளை அமைச்சர் திறந்து வைக்க இருந்த ஸ்மார்ட்சிட்டி குளங்களை அவசர அவசவரமாக மாநகராட்சி ஆணையர் திறந்து வைத்தார்.


கோவை- சமீபத்தில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் கோவையில் பிரச்சாரம் செய்தபோது, கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் அளித்த மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும், என கார்த்திக் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.



கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் எம்.எல்.ஏ.வுமான கார்த்திக் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



"ஸ்டாலின் தான் வாராரு. விடியல் தரப்போறாரு" என்ற பாடல் தற்போது தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலை பலர் அடிக்கடி கேட்டு மகிழ்கின்றனர். இன்னும் சிலர் தங்களின் ரிங்டோன் இந்த பாடலை பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. இப்படி பிரபலமான பாடலை அனைவரும் எளிதில் பதிவிறக்கம் செய்து கொள்வதற்கு வசதியாக அந்தப் பாடல் உடைய ஆப்பின் லிங் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் டீக்கடைகளில் ஒட்ட உள்ளோம். அதனைப் பார்த்து பொதுமக்கள் அந்த பாடலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இதுவரை 140 தொகுதிகளுக்கு சென்று 20 லட்சம் பேரை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டுள்ளார்.

கோவையில் நடைபெற்ற ஒவ்வொரு கூட்டத்திலும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு, தற்போது சென்னைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. திமுக ஆட்சி அமைந்ததும், மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற மறுநாள் இந்தப் புகார் பெட்டிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மனுக்கள் மீதான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும், இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...