தேர்தல் அறிவிப்பை முன்னிட்டு நாளை அமைச்சர் திறந்து வைக்க இருந்த ஸ்மார்ட்சிட்டி குளங்களை அவசர அவசவரமாக மாநகராட்சி ஆணையர் திறந்து வைப்பு..?

தேர்தல் அறிவிப்பை முன்னிட்டு நாளை அமைச்சர் திறந்து வைக்க இருந்த ஸ்மார்ட்சிட்டி குளங்களை அவசர அவசவரமாக மாநகராட்சி ஆணையர் திறந்து வைத்தார்.



கோவையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்று வந்த நிலையில், அத்திட்டத்தின் கீழ் கோவையில் உள்ள 5 குளங்களிலும், ஸ்மார்ட் சிட்டி பூங்காக்கள் அமைப்பட்டுவந்தன.



தேர்தல் அறிவிப்பை முன்னிட்டு தேர்தல் நடைமுறை விதிகள் நாளை முதல் அமலுக்கு வருவதால், நாளை அமைச்சர் திறந்து வைக்க இருந்த பூங்காக்களை, மக்கள் பயன்பாட்டிற்கு, அவசர அவசரமாக மாநகராட்சி ஆணையர் இன்று திறந்து வைத்தார் என்று கூறப்படுகிறது.



கடந்த ஆண்டு தமிழக முதல்வரால் துவக்கி வைக்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டம் பணிகளின் கீழ் பணிகள் பெரியகுளம், வாலங்குளம், கிருஷ்ணம்பதி, செல்வம்பதி, குமாராசாமி, செல்வசிந்தாமணி ஆகிய குளங்களின் கரைகளில், பூங்கா வேலைகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று முதல் அவை அனைத்தும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படுவதாக, மாவட்ட ஆணையர் குமரவேல் பாண்டியன் தெரிவித்தார்.



அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர், இந்த பூங்கா இடங்களில், நடைபயிற்சி மேற்கொள்ளுதல், மிதிவண்டி பயிற்சி செய்தல், குழந்தைகள் விளையாடும் வசதிகள் உள்ளன இக்குளங்களை தூய்மையாக வைத்து கொள்ள அனைவரும் உதவிபுரிய வேண்டும், என்று பொதுமக்ககளை கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.

இது கோவை மக்களுக்கு கிடைத்த வரபிரசாதம் எனவும் இதனை மக்கள் பயன்படுத்தி மகிழ்வதோடு மட்டுமல்லாமல் இங்குள்ள நீர் நிலைகள், நீரை சார்ந்துள்ள உயிரினங்களை பாதுகாத்திட மக்கள் உதவிட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைப்பதாக தெரிவித்தார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...