கோவை நகைக்கடையில் வெள்ளி டம்ளர் அபேஸ்: கணவன், மனைவி கையும்களவுமாக கைது!

கோவை: கோவையில் நகைக் கடைக்குச் சென்று நகை வாங்குவதுபோல் நடித்து வெள்ளி டம்ளரை அபேஸ் செய்த கணவன் மனைவி கையும்களவுமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


கோவை: கோவையில் நகைக் கடைக்குச் சென்று நகை வாங்குவதுபோல் நடித்து வெள்ளி டம்ளரை அபேஸ் செய்த கணவன் மனைவி கையும்களவுமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர்.ரோட்டில் உள்ள ஒரு நகைக் கடையில் ஊழியராக வேலை பார்ப்பவர்ரவி. இடையர்பாளையத்தைச் சேர்ந்த இவரது கடைக்கு நகை வாங்குவதற்காக நேற்று மாலை ஒரு தம்பதியர் வந்தனர். அவர்கள் ரவியிடம் வெள்ளிப் பொருட்கள் வேண்டும் என்று கேட்டனர். இதையடுத்து அவர் ஒவ்வொன்றாக எடுத்துக் காண்பித்தபோது திடீரென இரண்டுபேரும் சேர்ந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 20 கிராம் எடை கொண்ட வெள்ளி டம்ளரை திருடி தப்பிச் செல்ல முயன்றனர்.

இதனைப் பார்த்த ரவி அவர்கள் இரண்டுபேரையும் கையும் களவுமாகப் பிடித்து சாய்பாபா காலனி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் இரண்டுபேரும் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தைச் சேர்ந்த கண்ணன் (வயது 55), அவரது மனைவி செல்வி (வயது 48) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் இதுபோன்று நகைக் கடைகளுக்கு சென்று நூதன முறையில் பலமுறை திருடியவர்கள் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்து இன்று மதியம் சிறையில் அடைத்தனர். நூதன திருட்டில் ஈடுபட்ட இந்தந் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...