கோவையில், விடுதி வாடகை கேட்ட உரிமையாளருக்கு அடி உதை: தாய், மகன் கைது!

கோவை: கோவையில் விடுதி வாடகை கேட்ட உரிமையாளரை தாயும், மகனும் சேர்ந்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இருவரும் கைது செய்யப்பட்டனர்.


கோவை: கோவையில் விடுதி வாடகை கேட்ட உரிமையாளரை தாயும், மகனும் சேர்ந்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் சந்திராசாமி. இவர் பூ மார்க்கெட் பகுதியில் தங்கும் விடுதி வைத்து நடத்தி வருகிறார். இவரது விடுதியில் பூ மார்க்கெட்டைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரது மனைவி விஜயா (வயது 48), இவர்களது மகன் தங்கராஜ். இவர்கள் கடந்த ஒரு வருடமாக இந்த விடுதியில் வசித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக இவர்கள் வாடகை கொடுக்காமல் இருந்தனர். இதனால் அவர்களை விடுதியை காலி செய்து விட்டு செல்லுமாறு சந்திராசாமி கூறினார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தாயும், மகனும் சேர்ந்துகொண்டு விடுதி உரிமையாளர் சந்திரசாமியை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் அடித்து உதைத்தனர்.

இதுகுறித்து சந்திராசாமி ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுதி உரிமையாளரைத் தாக்கிய விஜயா அவரது மகன் தங்கராஜ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...