திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் தங்களது சேலைகளை கொண்டு கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் தங்களது சேலைகளை கொண்டு கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் சத்துணவு திட்டத்தின் கீழ் 38 ஆண்டுகளாக பணிபுரிந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு வெறும் 2,000 மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருவதாகவும், இதனை உயர்த்தி வழங்குவதாக 2016ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு ஒட்டு மொத்த தொகை, அமைப்பாளர்களுக்கு 5 லட்சம், சமையலர் சமையல் உதவியாளர்களுக்கு 3 லட்சம் வழங்கி காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், 4வது நாளான இன்று, வெயில் அதிகமாக இருப்பதால் போராட்டம் நடத்தி வரும் இடத்தில் டெண்ட் அமைக்க அனுமதி கேட்டனர். ஆனால், போலீசார் அனுமதி மறுத்து விட்டனர்.

இதையடுத்து, சத்துணவு ஊழியர்கள் தாங்கள் கொண்டுவந்திருந்த சேலையை கூடாரமாக அமைத்து, அதற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் சத்துணவு திட்டத்தின் கீழ் 38 ஆண்டுகளாக பணிபுரிந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு வெறும் 2,000 மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருவதாகவும், இதனை உயர்த்தி வழங்குவதாக 2016ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு ஒட்டு மொத்த தொகை, அமைப்பாளர்களுக்கு 5 லட்சம், சமையலர் சமையல் உதவியாளர்களுக்கு 3 லட்சம் வழங்கி காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், 4வது நாளான இன்று, வெயில் அதிகமாக இருப்பதால் போராட்டம் நடத்தி வரும் இடத்தில் டெண்ட் அமைக்க அனுமதி கேட்டனர். ஆனால், போலீசார் அனுமதி மறுத்து விட்டனர்.
இதையடுத்து, சத்துணவு ஊழியர்கள் தாங்கள் கொண்டுவந்திருந்த சேலையை கூடாரமாக அமைத்து, அதற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.