கோவை: பொள்ளாச்சியில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் அவதியடைந்தனர்.
கோவை: பொள்ளாச்சியில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் அவதியடைந்தனர்.
தமிழகம் முழுவதும் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி பகுதியை பொருத்தவரை மூன்று போக்குவரத்து பணிமனைகளில் 180 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று போக்குவரத்து தொழிலாளர்களின் இந்த போராட்டம் காரணமாக குறைந்த எண்ணிக்கையில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில், இன்று காலை முதலே பல்வேறு பணிகளுக்காக உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்கள், தொழிலாளர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் பேருந்து வசதி இல்லாத காரணத்தினால் நீண்ட நேரமாக காத்துக் கிடக்கின்றனர்.

மேலும், தனியார் பேருந்துகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அவர்கள் முந்தியடித்துக்கொண்டு பேருந்துகளில் ஏறி வருவதால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
எனவே, தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி பகுதியை பொருத்தவரை மூன்று போக்குவரத்து பணிமனைகளில் 180 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று போக்குவரத்து தொழிலாளர்களின் இந்த போராட்டம் காரணமாக குறைந்த எண்ணிக்கையில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை முதலே பல்வேறு பணிகளுக்காக உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்கள், தொழிலாளர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் பேருந்து வசதி இல்லாத காரணத்தினால் நீண்ட நேரமாக காத்துக் கிடக்கின்றனர்.
மேலும், தனியார் பேருந்துகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அவர்கள் முந்தியடித்துக்கொண்டு பேருந்துகளில் ஏறி வருவதால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
எனவே, தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.