கருமாரி அம்மன் கோயில் பூட்டை உடைத்து சாமி சிலை திருட்டு: கோவையில் பரபரப்பு!

கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள அம்மன் கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சாமி சிலையை திருடிச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள அம்மன் கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சாமி சிலையை திருடிச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை காட்டூர் புதியவர் நகர் பகுதியில் கருமாரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு பணியில் இருக்கும் பூசாரி நேற்று மாலை கோயிலை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றார். இன்று காலை 8 மணி அளவில் கோயிலைத் திறப்பதற்காக வந்தார். அப்போது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த சாமி சிலை மாயமாகி இருந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர்கள் கோவை காட்டூர் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த குற்றப்பிரிவு போலீசார் கைரேகை நிபுணர்கள் உள்பட மோப்ப நாய்களை வரவழைத்து சோதனை செய்தனர். தொடர்ந்து சாமி சிலையை திருடிச் சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...