கோவை: உடுமலை தொகுதியில் உள்ள அனைத்து ஊராட்சிகளும் தன்னிறைவு பெற்றுள்ளன என்று கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பெருமிதத்துடன் கூறினார்.
கோவை: உடுமலை தொகுதியில் உள்ள அனைத்து ஊராட்சிகளும் தன்னிறைவு பெற்றுள்ளன என்று கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பெருமிதத்துடன் கூறினார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆவல் சின்னாம்பாளையம், பொன்னே கவுண்டனூர், ஊஞ்சவெலம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் 980 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 23 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கும் விழாவை கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
அப்போது அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

உடுமலை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஊஞ்சவெலம்பட்டி ஊராட்சிக்கு மட்டும் 600 பயனாளிகளுக்கு ரூபாய் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கப்பட்டன.
உடுமலை சட்டமன்ற தொகுதியில் உட்பட்ட ஊராட்சிகளில் 6,500 வீடுகள், 4,000 இலவச வீட்டுமனை பட்டா, 23 ஆயிரம் முதியோருக்கு ஓய்வூதியம், 7 ஆயிரத்து 800 பேருக்கு வேலைவாய்ப்பு, 3,500 பேருக்கு தாலிக்கு தங்கம், 2500 பேருக்கு 50 சதவீத மானியத்துடன்கூடிய இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. உடுமலை சட்டமன்றத் தொகுதியில் உள்ள அனைத்து ஊராட்சிகளும் தன்னிறைவு ஊராட்சியாக மாற்றப்பட்டு உள்ளது. பள்ளி கல்வித்துறைக்கு மட்டும் 25,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய ஒரே மாநிலம் தமிழகம் மட்டும்தான். இவ்வாறு அவர் பேசினார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆவல் சின்னாம்பாளையம், பொன்னே கவுண்டனூர், ஊஞ்சவெலம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் 980 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 23 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கும் விழாவை கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
அப்போது அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
உடுமலை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஊஞ்சவெலம்பட்டி ஊராட்சிக்கு மட்டும் 600 பயனாளிகளுக்கு ரூபாய் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கப்பட்டன.
உடுமலை சட்டமன்ற தொகுதியில் உட்பட்ட ஊராட்சிகளில் 6,500 வீடுகள், 4,000 இலவச வீட்டுமனை பட்டா, 23 ஆயிரம் முதியோருக்கு ஓய்வூதியம், 7 ஆயிரத்து 800 பேருக்கு வேலைவாய்ப்பு, 3,500 பேருக்கு தாலிக்கு தங்கம், 2500 பேருக்கு 50 சதவீத மானியத்துடன்கூடிய இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. உடுமலை சட்டமன்றத் தொகுதியில் உள்ள அனைத்து ஊராட்சிகளும் தன்னிறைவு ஊராட்சியாக மாற்றப்பட்டு உள்ளது. பள்ளி கல்வித்துறைக்கு மட்டும் 25,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய ஒரே மாநிலம் தமிழகம் மட்டும்தான். இவ்வாறு அவர் பேசினார்.