கோவை: கோவை சொக்கம்புதூர் பகுதியில் ரூ.122.80 லட்சத்தில் சமுதாய நலக்கூடத்தை அமைச்சர் வேலுமணி திறந்து வைத்தார்.
கோவை: கோவை சொக்கம்புதூர் பகுதியில் ரூ.122.80 லட்சத்தில் சமுதாய நலக்கூடத்தை அமைச்சர் வேலுமணி திறந்து வைத்தார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.77 சொக்கம்புதூர் பகுதியில் ரூ.122.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இன்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலா் பெ.குமாரவேல் பாண்டியன், தலைமை தாங்கினார். மாநகராட்சி துணை ஆணையாளர் ச.மதுராந்தகி முன்னிலை வகித்தார். மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், பொறியாளர் ஞானவேல், தெற்கு மண்டல உதவி ஆணையர் தி.ரா.ரவி, மண்டல சுகாதார அலுவலர் லோகநாதன், மாநகராட்சி அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.