நீலகிரி: நீலகிரி மாவட்டத்திற்கு வரும் கேரள மாநில சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் கொண்டு வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அத்துடன் இ ரெஜிஸ்ட்ரேசன் கட்டாயம் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்திற்கு வரும் கேரள மாநில சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் கொண்டு வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அத்துடன் இ ரெஜிஸ்ட்ரேசன் கட்டாயம் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் சைல்டு ஹெல்ப் லைன் சார்பில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழாவையொட்டி செஹலி என்னும் பெண் குழந்தைகளுக்கு எதிராக வன்கொடுமைகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் 1098 இலவச தொலைபேசி எண்ணினை மாவட்ட ஆட்சியர் அறிமுகப்படுத்தினார்.
பின்னர் விழாவில் பேசிய அவர், தேயிலை தோட்டங்களில் அதிகளவு பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களின் குழந்தைகள் உள்பட அனைத்து குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் இச்செயலி அமையும் என்றார்.
மேலும், பெண் குழந்தைகளிடையே தன்னம்பிக்கையை தோற்றுவிக்கும் வகையில் உன் வாழ்க்கை உன் கையில் என்ற மாவட்ட ஆட்சியரின் கையொப்பமிட்ட கடிதங்கள் பள்ளிகளில் பயிலும் 1,15,000 மாணவிகளுக்கு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். விழாவில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தும் உறுதி மொழியும் எடுக்கப்பட்டது.