Exclusive: அரசு போக்குவரத்து ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்; கோவையில் 700 பேருந்துகள் வரை இயங்காது

அரசு போக்குவரத்து ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்; கோவையில் 700 பேருந்துகள் வரை இயங்காது



கோவை: ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் கோவையில் நாளை முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் 14 ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை சுமூகமாக நடத்தாமல் போக்குவரத்து கழக நிர்வாகம் தொடர்ந்து இழுபறித்து கொண்டிருக்கிறது. உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வை எட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் இன்று முதல் கோவை மண்டலத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இதுகுறித்து அரசு போக்குவரத்து தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கோவை மண்டல பொதுச் செயலாளர் பெரியசாமி கூறுகையில், ‘‘கோவை மண்டலத்தில் மட்டும் சுமார் 1200 பேருந்துகள் உள்ளன. இவற்றில் கொரோனா காலத்தை காரணம் காட்டி தற்போது 900 பேருந்துகள் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் 700 பேருந்துகள் வரை இயங்காது. கோவை மண்டலத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களில் 60 சதவீதம் பேர் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள்,’’ என்றார்.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்களான எல்.பி.எப், சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, எச்.எம்.எஸ், ஐ.என்.டி.யூ.சி, உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் கலந்து கொள்ள உள்ளனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...