கோவை கலெக்டர் அலுவலகம் முன் அங்கன்வாடி ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்!

கோவை: ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவு கூறும்விதமாகவும், அவர் அறிவித்த திட்டங்களை தற்போதைய‌ தமிழக அரசு நிறைவேற்ற கோரியும் கோவை கலெக்டர் அலுவலகம் முன் அங்கன்வாடி ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவு கூறும்விதமாகவும், அவர் அறிவித்த திட்டங்களை தற்போதைய‌ தமிழக அரசு நிறைவேற்ற கோரியும் கோவை கலெக்டர் அலுவலகம் முன் அங்கன்வாடி ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரியும், தங்களுக்கு வழங்க வேண்டிய முறையான கால முறை ஊதியம், அங்கன்வாடி ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு வழங்குவதைப் போன்ற குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் பணி ஓய்வு பெறும்போது ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு பணிக்கொடையாக குறைந்தபட்சம் ரூபாய் 10 லட்சம் மற்றும் ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும் என்பதுபோன்ற கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்று விரைவில் தீர்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ஆர்.சாந்தி தெரிவித்தார்.



மேலும், தங்களது கோரிக்கைகளை கருத்தில்கொண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று அவற்றை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம் என்று கூறினார்.



இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவு கூறும்விதமாகவும், அவர் அறிவித்த திட்டங்களை தற்போதைய‌ தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் மெழுகுவர்த்தி ஏந்தி தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...