கோவை: கோவையில் மூதாட்டி ஒருவர் எந்த ஊர் செல்கிறோம் என்பது தெரியாமல் கோவையில் வந்து இறங்கி சாலையில் புலம்பி அழுது கொண்டிருந்தார். இதுகுறித்து பொதுமக்கள் விசாரணை செய்து போலீசில் ஒப்படைத்தனர்.
கோவை: கோவையில் மூதாட்டி ஒருவர் எந்த ஊர் செல்கிறோம் என்பது தெரியாமல் கோவையில் வந்து இறங்கி சாலையில் புலம்பி அழுது கொண்டிருந்தார். இதுகுறித்து பொதுமக்கள் விசாரணை செய்து போலீசில் ஒப்படைத்தனர்.
வேலம்மாள் என்ற பெயர்கொண்ட பாட்டி கோவை காந்திபுரம் 100 அடி சாலைப் பகுதியில் சாலையில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தார். அங்கு சென்றவர்கள் அவரிடம் பசிக்கிறதா? சாப்பிடுகிறீர்களா? எனக் கேட்டதற்கு அந்த மூதாட்டி, `இது எந்த ஊர்?' என்று கேட்டார். வழி தெரியாமல் இந்த ஊருக்கு வந்துவிட்ட இவர் `எங்கே செல்வது என தெரியவில்லை' என புலம்பி அழுதார்.
நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்று கேட்டதற்கும் அந்த மூதாட்டியால்ஊர், பெயர் சொல்லத் தெரியவில்லை. அதனால் அந்த பகுதிக்குள் சென்ற மக்கள் மனமுருகி மூதாட்டிக்கு உணவு வாங்கிக் கொடுத்து பஸ் ஏற்றி கோவை காந்திபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் பாட்டி குறித்த விவரங்களை விசாரித்து வருகின்றனர்.
வேலம்மாள் என்ற பெயர்கொண்ட பாட்டி கோவை காந்திபுரம் 100 அடி சாலைப் பகுதியில் சாலையில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தார். அங்கு சென்றவர்கள் அவரிடம் பசிக்கிறதா? சாப்பிடுகிறீர்களா? எனக் கேட்டதற்கு அந்த மூதாட்டி, `இது எந்த ஊர்?' என்று கேட்டார். வழி தெரியாமல் இந்த ஊருக்கு வந்துவிட்ட இவர் `எங்கே செல்வது என தெரியவில்லை' என புலம்பி அழுதார்.
நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்று கேட்டதற்கும் அந்த மூதாட்டியால்ஊர், பெயர் சொல்லத் தெரியவில்லை. அதனால் அந்த பகுதிக்குள் சென்ற மக்கள் மனமுருகி மூதாட்டிக்கு உணவு வாங்கிக் கொடுத்து பஸ் ஏற்றி கோவை காந்திபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் பாட்டி குறித்த விவரங்களை விசாரித்து வருகின்றனர்.