செல்போன் டவர் மீது ஏறி பெண் தற்கொலை மிரட்டல்: கோவை பூ மார்க்கெட்டில் பரபரப்பு!

கோவை: செல்போன் டவர் மீது ஏறி பெண் தற்கொலை மிரட்டலில் ஈடுபட்டதால் கோவை பூ மார்க்கெட் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: செல்போன் டவர் மீது ஏறி பெண் தற்கொலை மிரட்டலில் ஈடுபட்டதால் கோவை பூ மார்க்கெட் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் விஜயா. இவர் தனது இரண்டு மகள்களுடன் கோவை பூ மார்க்கெட் பகுதி வணிக வளாகத்தில் குடியிருந்து வருகிறார். இதற்காக 30 ஆயிரம் ரூபாய் முன்தொகை கொடுத்ததுடன் மாதம் 7 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் காம்ப்ளக்சில் உள்ள மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்புகளை கட்டட உரிமையாளர் துண்டித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கே குடியிருக்க முடியாமல் விஜயா குடும்பத்துடன் சிரமப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று மாலை விஜயா அப்பகுதியில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டினார். மேலும் கட்டிட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை செல்போன் டவரில் இருந்து இறங்க மாட்டேன் என்று கூறினார்.

இதுபற்றி கேள்விப்பட்டதும் சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் விரைந்தனர். மேலும் செல்போன் டவர் மீது நின்ற விஜயாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சமாதானம் பேசி தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் அவரை பாதுகாப்புடன் கீழே இறக்கினர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...