கோவையில் தொடரும் தரமில்லாத பிளாஸ்டிக் பயன்பாடு; 48 உணவகங்களின் உரிமையாளர்களுக்கு ரூ.96 ஆயிரம் அபராதம்
கோவை: கோவையில் இந்தாண்டில், இதுவரை தரமில்லாத பிளாஸ்டிக் பயன்படுத்திய 48 உணவகங்களின் உரிமையாளர்களுக்கு ரூ.96 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் அன்னதானம் நடைபெறும் கோவில்களில் உணவுகளை கையாள்பவர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் 60 பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், அவர்களுக்கு உணவு சமைக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் தரத்தை அறிந்து கொள்ளுதல், சமைத்தல், விநியோகம் என அனைத்திலும் சுகாதாரத்தை கடைபிடிக்கும் வகையில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.
இவர்களுக்கு உணவு பாதுகாப்பு துறையின் கீழ் வழங்கப்படும் போக் தரச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவையில் உள்ள ஈச்சனாரி விநாயகர் கோவில், மருதமலை முருகன் கோவில், கோனியம்மன் கோவில், லட்சுமி நரசிம்மர் கோவில், பேரூர் பட்டீசுவரர் கோவில் ஆகிய கோவில்களுக்கு சுகாதார தரச்சான்று பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்ததாக இதுவரை 185 சில்லறை வியாபாரிகளுக்கு ரூ.9 லட்சத்து 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதில், ஒரு வியாபாரிக்கு 2-வது முறையாக புகையிலை பொருட்கள் விற்றதற்காக ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
அதே போல், தரமில்லாத பிளாஸ்டிக் பயன்படுத்திய 48 உணவகங்களின் உரிமையாளர்களுக்கு ரூ.96 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் அன்னதானம் நடைபெறும் கோவில்களில் உணவுகளை கையாள்பவர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் 60 பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், அவர்களுக்கு உணவு சமைக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் தரத்தை அறிந்து கொள்ளுதல், சமைத்தல், விநியோகம் என அனைத்திலும் சுகாதாரத்தை கடைபிடிக்கும் வகையில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.
இவர்களுக்கு உணவு பாதுகாப்பு துறையின் கீழ் வழங்கப்படும் போக் தரச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவையில் உள்ள ஈச்சனாரி விநாயகர் கோவில், மருதமலை முருகன் கோவில், கோனியம்மன் கோவில், லட்சுமி நரசிம்மர் கோவில், பேரூர் பட்டீசுவரர் கோவில் ஆகிய கோவில்களுக்கு சுகாதார தரச்சான்று பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்ததாக இதுவரை 185 சில்லறை வியாபாரிகளுக்கு ரூ.9 லட்சத்து 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதில், ஒரு வியாபாரிக்கு 2-வது முறையாக புகையிலை பொருட்கள் விற்றதற்காக ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
அதே போல், தரமில்லாத பிளாஸ்டிக் பயன்படுத்திய 48 உணவகங்களின் உரிமையாளர்களுக்கு ரூ.96 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.