கோவை பெட்டிக்கடைகளில் குட்கா, பான்பராக் பொருட்கள் விற்பனை அமோகம்: 13 பேர் கைது!

கோவை: கோவை மாநகரைச் சுற்றியுள்ள பெட்டிக்கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. இதுதொடர்பாக 13 பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை மாநகரைச் சுற்றியுள்ள பெட்டிக்கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. இதுதொடர்பாக 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை புறநகர் பகுதியில் அடிக்கடி போலீசார் சோதனை செய்யும்போது லாரிகள் மற்றும் மினி வேன்களில் புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்படுவது கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்டவர்களை பிடித்து வருகின்றனர். அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சரவணம்பட்டி பகுதியில் சோதனைச்சாவடியில் போலீசார் பணியில் இருந்தபோது ஒரு லாரியை மடக்கி சோதனை செய்தனர். அந்த லாரி முழுவதும் புகையிலை, குட்கா, பான்பராக் போன்ற பொருட்களை கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் சரணம்பட்டி பகுதியில் உள்ள குடோனுக்கு புகையிலைப் பொருள்களை கொண்டுபோவதாக கூறினார். இதையடுத்து அந்த குடோனை திறந்து பார்த்தபோது அங்கு டன் கணக்கில் குட்கா பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அங்கிருந்து சில்லறை விற்பனைக்காக கடைகளுக்கு அனுப்பப்படுவதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு போலீசார் அந்த குடோனுக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்து வந்த சூழலில் கோவை மாநகர் பகுதிகளில் உள்ள அனைத்து பெட்டிக் கடைகளிலும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் அமோகமாக விற்பனை நடைபெறுவது தெரியவந்தது.

இந்நிலையில் கோவை செட்டி வீதி, வி.சி.வி.ரோடு, ஆர்.ஜி.வீதி, டவுன் ஹால், புலியகுளம், செட்டிபாளையம் ரோடு, எல்.ஜி.நகர், கோவைபுதூர், மெயின் ரோடு உட்பட்ட பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதாக 13 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 210 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...