கோவை: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக சிங்காநல்லூர் தொகுதி கார்த்திக் எம்.எல்.ஏ மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். முன்ஜாமீன் பெற்ற அவர் குனியமுத்தூர் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதி இனி கையெழுத்திட வேண்டாம் என நிபந்தனையை தளர்த்தி உத்தரவு பிறப்பித்தார்.
கோவை: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக சிங்காநல்லூர் தொகுதி கார்த்திக் எம்.எல்.ஏ மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். முன்ஜாமீன் பெற்ற அவர் குனியமுத்தூர் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதி இனி கையெழுத்திட வேண்டாம் என நிபந்தனையை தளர்த்தி உத்தரவு பிறப்பித்தார்.
கோவை குனியமுத்துாரை சேர்ந்த 'ஆலயம் பவுண்டேஷன்' கட்டுமான நிறுவன இயக்குனர் ரங்கராஜ் மற்றும் அமைச்சர் வேலுமணி குறித்து, சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியதாக சிங்காநல்லுார் தி.மு.க. எம்.எல்.ஏ. கார்த்திக் மீது புகார் அளிக்கப்பட்டது. குனியமுத்தூர் போலீசார் வழக்குப் பதிந்து மனுவை விசாரித்து வந்த நிலையில், முன் ஜாமீன் கோரி கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் கார்த்திக் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து கீழ்கோர்ட்டில் சரணடைந்து ஜாமீன் பெற்றுக்கொள்ள நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து ஜே.எம்-7 கோர்ட்டில் கடந்த 5-ம் தேதி சரணடைந்த கார்த்திக் எம்.எல்.ஏ.வுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மறு உத்தரவு வரும் வரை தினசரி காலை குனியமுத்தூர் காவல்நிலையத்தில் கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டது. அதன்படி, கையெழுத்திட்டு வந்த அவர் நிபந்தனையை தளர்த்தக் கோரி மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி கார்த்திக்கிற்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டார்.
கோவை குனியமுத்துாரை சேர்ந்த 'ஆலயம் பவுண்டேஷன்' கட்டுமான நிறுவன இயக்குனர் ரங்கராஜ் மற்றும் அமைச்சர் வேலுமணி குறித்து, சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியதாக சிங்காநல்லுார் தி.மு.க. எம்.எல்.ஏ. கார்த்திக் மீது புகார் அளிக்கப்பட்டது. குனியமுத்தூர் போலீசார் வழக்குப் பதிந்து மனுவை விசாரித்து வந்த நிலையில், முன் ஜாமீன் கோரி கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் கார்த்திக் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து கீழ்கோர்ட்டில் சரணடைந்து ஜாமீன் பெற்றுக்கொள்ள நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து ஜே.எம்-7 கோர்ட்டில் கடந்த 5-ம் தேதி சரணடைந்த கார்த்திக் எம்.எல்.ஏ.வுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மறு உத்தரவு வரும் வரை தினசரி காலை குனியமுத்தூர் காவல்நிலையத்தில் கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டது. அதன்படி, கையெழுத்திட்டு வந்த அவர் நிபந்தனையை தளர்த்தக் கோரி மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி கார்த்திக்கிற்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டார்.