கோவையில் ரூ.1 லட்சம் பணம், 12 பவுன் நகை திருட்டு: வீட்டு வாசலில் மறைத்து வைத்த சாவியை எடுத்து வீட்டைத் திறந்து திருடன் கைவரிசை!

கோவையில் வீட்டு வாசலில் மறைத்து வைத்த சாவியை எடுத்து வீட்டைத் திறந்த திருடன் அங்கிருந்த ரூ.1 லட்சம் பணம் மற்றும் 12 பவுன் நகையை திருடிச் சென்றான்.


கோவையில் வீட்டு வாசலில் மறைத்து வைத்த சாவியை எடுத்து வீட்டைத் திறந்த திருடன் அங்கிருந்த ரூ.1 லட்சம் பணம் மற்றும் 12 பவுன் நகையை திருடிச் சென்றான்.

கோவை. மணியகாரம்பாளையம், பூசாரிபாளையம், திருவள்ளுவர் வீதி பகுதியில் வசிப்பவர் பன்னீர் செல்வம் மகன் வேலப்ப உடையார். இவர் தனது மனைவியுடன் குலதெய்வம் கோயிலுக்குச் செல்வதற்காக இன்று காலை 10 மணி அளவில் வீட்டை பூட்டி விட்டு சாவியை ஜன்னலில் மறைத்து வைத்து குடும்பத்துடன் புறப்பட்டார்.

பொன்னே கவுண்டன் புதூர் பகுதியில் உள்ள குலதெய்வம் கோயிலுக்குச் சென்று விட்டு பிறகு மாலை 4 மணி அளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது சாவி கதவில் இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது ஜன்னலில் மறைத்து வைத்திருந்த சாவியை திருடன் எடுத்து கதவைத் திறந்து வீட்டுக்குள் சென்று பீரோவைத் திறந்து 12 பவுன் நகை 1 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்றிருக்கிறான். மேலும் வீட்டில் சிறிது நேரம் டி.வி. போட்டு பார்த்துவிட்டு சென்றது தெரியவந்தது.

நகை மற்றும் பணம் திருட்டு போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வேலப்ப உடையார் கோவை சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சரவணம்பட்டி போலீசார்விரைந்து வந்து கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் சகிதமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...