கோவை: தேசிய கல்வி கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெறுதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: தேசிய கல்வி கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெறுதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்கிக் கோரியும், ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறக் கோரியும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்குதல் உட்பட 7 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மாநிலம் தழுவிய மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட், தன் மீதும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் மா.ரவிச்சந்திரன் அவர்கள் மீதும் பள்ளிக்கல்வித்துறையினரால் எடுக்கப்பட்ட 17(ஆ) நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், ஆசிரியர்கள் பெற்று வந்த உயர்கல்விக்கு ஊக்க ஊதியம் ரத்து செய்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் 37, 116 ஆகியவற்றை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.