கோவை: கேரளாவில் பள்ளி சென்று வீடு திரும்பிய மாணவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். குற்றவாளி கோவையில் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் தேடிவருகின்றனர்.
கோவை: கேரளாவில் பள்ளி சென்று வீடு திரும்பிய மாணவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். குற்றவாளி கோவையில் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் தேடிவருகின்றனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ். இவருக்கு 17 வயதில் ரேஷ்மா என்ற மகள் இருந்தார். ரேஷ்மா இடுக்கி சண் வாலி மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் பள்ளிக்குச் சென்ற ரேஷ்மா நீண்டநேரமாகியும் வீடுதிரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர் இடுக்கி வெள்ளதூவல் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதற்கிடையே ரேஷ்மாவின் உறவினர்கள் காவல்துறையினருடன் சேர்ந்து ரேஷ்மாவை தீவிரமாக தேடினர். அப்போது ரேஷ்மா வீட்டின் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் உள்ள ஒரு முட்புதரில் நெஞ்சுப்பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். மகள் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சியில் மூழ்கினர்.
ரேஷ்மா இறந்து கிடந்த இடத்தில் சோதனையிட்டபோது அங்கு ஒரு மொபைல் போன் கிடைத்தது. அது யாருடையது என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது அது ரேஷ்மாவின் உறவினர் அனு என்பவருடையது என்று தெரியவந்தது. இதையடுத்து ரேஷ்மா நடந்து சென்ற சாலையில் இருந்த சி.சி.டி.வி. போலீசார் ஆய்வு செய்தபோது, ரேஷ்மாவுடன் அனு நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
இதன்பேரில் போலீசார் அனுவைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அவர் தற்போது வரை எங்குள்ளார் என்ற தகவல் கிடைக்கவில்லை. ஆகையால் தப்பிச் சென்ற அனு தமிழகத்துக்குச் சென்றிருக்கலாம் என போலீசார் கூறினர். இதையடுத்து கோவை காவல்துறை துணையுடன் கேரள போலீசார் கோவையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ். இவருக்கு 17 வயதில் ரேஷ்மா என்ற மகள் இருந்தார். ரேஷ்மா இடுக்கி சண் வாலி மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் பள்ளிக்குச் சென்ற ரேஷ்மா நீண்டநேரமாகியும் வீடுதிரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர் இடுக்கி வெள்ளதூவல் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதற்கிடையே ரேஷ்மாவின் உறவினர்கள் காவல்துறையினருடன் சேர்ந்து ரேஷ்மாவை தீவிரமாக தேடினர். அப்போது ரேஷ்மா வீட்டின் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் உள்ள ஒரு முட்புதரில் நெஞ்சுப்பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். மகள் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சியில் மூழ்கினர்.
ரேஷ்மா இறந்து கிடந்த இடத்தில் சோதனையிட்டபோது அங்கு ஒரு மொபைல் போன் கிடைத்தது. அது யாருடையது என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது அது ரேஷ்மாவின் உறவினர் அனு என்பவருடையது என்று தெரியவந்தது. இதையடுத்து ரேஷ்மா நடந்து சென்ற சாலையில் இருந்த சி.சி.டி.வி. போலீசார் ஆய்வு செய்தபோது, ரேஷ்மாவுடன் அனு நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
இதன்பேரில் போலீசார் அனுவைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அவர் தற்போது வரை எங்குள்ளார் என்ற தகவல் கிடைக்கவில்லை. ஆகையால் தப்பிச் சென்ற அனு தமிழகத்துக்குச் சென்றிருக்கலாம் என போலீசார் கூறினர். இதையடுத்து கோவை காவல்துறை துணையுடன் கேரள போலீசார் கோவையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.