கோவை: கோவையில் வங்கி அதிகாரி ஒருவர் கைகால் கட்டப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். அவருக்கு பல இடங்களில் பெண் பார்த்தும் வரன் அமையாததால் மன உளைச்சல் இருந்ததால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கோவை: கோவையில் வங்கி அதிகாரி ஒருவர் கைகால் கட்டப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். அவருக்கு பல இடங்களில் பெண் பார்த்தும் வரன் அமையாததால் மன உளைச்சல் இருந்ததால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தவர் சுந்தர்ராஜ் (வயது 29). இவர் நாமக்கல் மாவட்டம் வரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். கோவை சரவணம்பட்டியில் ஒரு அறை எடுத்து தங்கியிருந்தார். நேற்று நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது கால்கள் கட்டப்பட்டு, கைகளை கட்டப்பட்டு, கழுத்தில்தூக்குபோட்டு பிணமாக தொங்கியதைக் கண்டனர்.
இதுகுறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில், இவருக்கு மணப்பெண் அமையாததால் மன உளைச்சலில் இருந்ததாகவும், இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிவித்தனர். இருந்தாலும் சரவணம்பட்டி போலீசார்வழக்கு பதிவு செய்து கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தவர் சுந்தர்ராஜ் (வயது 29). இவர் நாமக்கல் மாவட்டம் வரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். கோவை சரவணம்பட்டியில் ஒரு அறை எடுத்து தங்கியிருந்தார். நேற்று நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது கால்கள் கட்டப்பட்டு, கைகளை கட்டப்பட்டு, கழுத்தில்தூக்குபோட்டு பிணமாக தொங்கியதைக் கண்டனர்.
இதுகுறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில், இவருக்கு மணப்பெண் அமையாததால் மன உளைச்சலில் இருந்ததாகவும், இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிவித்தனர். இருந்தாலும் சரவணம்பட்டி போலீசார்வழக்கு பதிவு செய்து கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.